செல்பி எடுத்த நருடோ குரங்கிற்கு இந்த ஆண்டிற்கான ‘சிறந்த நபர்’ என்ற விருதை விலங்குகள் உரிமை குழுமம் வழங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 ஆயிரத்து 11 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் சுலாவேசி என்ற தீவில் பிரிட்டன் புகைப்பட கலைஞர் டேவிட் ஸ்லேட்டர் குரங்குகளை புகைப்படம் எடுக்க சென்றார். காட்டில் அவர் பொருத்தி வைத்திருந்த கேமராவில் உள்ள பட்டனை அங்கிருந்த ‘நருடோ’ என பெயரிடப்பட்ட ‘கிரெஸ்டட் மேகாகஸ்’ இன குரங்கு ஒன்று அழுத்தியது. உடனே அந்த குரங்கின் புகைப்படம் பதிவானது. இது குரங்கு எடுத்த செல்பி என இணையதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், குரங்கு எடுத்த செல்பி இந்த ஆண்டின் சிறந்த நபர் என்ற விருதை பெற்றுள்ளது. இதற்கான அறிவிப்பை பீட்டா எனப்படும் விலங்குகள் உரிமை குழுமம் வெளியிட்டுள்ளது. குரங்கிற்கு இந்த விருது கிடைத்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *