நிமிர்ந்து நிற்க முடியாத, சுயமரியாதை இல்லாத அடிமை ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருவதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நிறைவுரையாற்றினார். அப்போது பேசிய அவர், தேவையான உரிமைகளைப் பெறுவதற்கு போராட வேண்டிய நிலையில் மாநிலங்கள் உள்ளதாகவும், மாநில முதலமைச்சர்கள் தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என மத்திய அரசு நினைக்கிறது என்று தெரிவித்தார். மேலும், நிமிர்ந்து நிற்க முடியாத, சுயமரியாதை இல்லாத அடிமை ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருவதாக மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.