சீனாவில் சற்று தாமதமாகத் தொடங்கியுள்ள இலையுதிர்காலத்தால் இயற்கைக் காட்சிகள் கண்களையும் மனதையும் கொள்ளைக் கொள்வதாக உள்ளன.

மலைப்பகுதிகள் இலையுதிர்காலத்தின் செந்நிற இலைகளால் நிறைந்து சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகின்றன. வண்ணமயமான இலையுதிர்காலம் தங்கள் வாழ்வை வளப்படுத்தியிருப்பதாக சீன மக்கள் உற்சாகமாக தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் சாக்லெட் கண்காட்சியை ஒட்டி, முழுக்க முழுக்க சாக்லெட்டுகளால் வடிவமைக்கப்பட்ட வண்ணமயமான சாக்லெட் ஆடைகளை மாடல் அழகிகள் அணிந்து ஒய்யார நடை நடந்து வந்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பல வகை சாக்லெட் ஆடைகளுடன் மாடல் அழகிகள் நடனமாடியபடி வலம் வந்தது பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *