சினை ஆடுக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை : கொடூரர்களுக்கு வலைவீச்சு

சினை ஆட்டை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஹரியானா மாநிலம் மேவத் நகரைச் சேர்ந்த ஒருவர் ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். அவர் வளர்த்த ஆடுகளில், கறுப்பு நிற ஆடு ஒன்று சினையாக இருந்துள்ளது. திடீரென அந்த ஆட்டை கடந்த 25ஆம் தேதி காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்த அவர், 26ஆம் தேதி காலை ஆடு இறந்து கிடந்ததை கண்டுள்ளார்.

இந்நிலையில் ஆட்டின் உரிமையாளர் நஜினா காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தனது சினை ஆட்டை மதுபோதையில் இருந்த 8 பேர், கடத்திச்சென்று வன்கொடுமை செய்து கொன்றுவிட்டதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் சவகார், ஹாரூன், ஜாஃபர் மற்றும் 5 பேர் கொண்ட கும்பல் தான் அது என்றும் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கருதப்படுபவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் உயிரிழந்த ஆட்டை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் தலைமறைவான 8 பேரையும் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *