பாகிஸ்தான் இளைஞர் ஒருவர் சாகசத்திற்காக பாறையில் இறங்கியபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்தவர் ஷேரஸ் கான். கல்லூரியில் படித்து வந்த ஷேரஸ், கடந்த சில தினங்களுக்கு பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த ஸ்வாத் நதிக்கரையில் உள்ள பாறையில் நின்று சாகசம் செய்ய விரும்பினார்.
இதற்காக பாறையில் இறங்கியபோது ஆற்றுக்குள் தவறி விழுந்தார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஷேரஸ் 2 மணி நேர தேடுதலுக்குப் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.