சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் ; ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. சபரிமலை கோயிலுக்கு பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமியரும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே, நுழைய அனுமதி அளிக்கப்படுகிறது. இதை எதிர்த்தும், அனைத்து பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில், பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான முடிவை கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இவ்வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி கோரும் வழக்கினை, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும், சுவாமி தரிசனம் செய்ய ஆண்களை போல பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *