கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த 14 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா தனியார் பள்ளியில் 2004ம் ஆண்டு இதே நாளில் நிகழ்ந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.
15 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்தனர். பள்ளி அருகே வைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் படங்கள் முன்பு, அவர்களின் உறவினர்களும் பொதுமக்களும் மெழுகுவர்த்தி ஏற்றி, நினைவுச் சின்னத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.