கிரீன்லாந்து பகுதியில் கடலோர கிராமத்தின் அருகில் வந்த பிரமாண்ட பனிப்பாறை

கிரீன்லாந்து பகுதியில் கடலோர கிராமத்தின் அருகில் வந்த பிரமாண்ட பனிப்பாறை அப்பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. மேற்கு கிரீன்லாந்து கடற்கரைப் பகுதியில் உள்ள இன்னர்சூட் ((Innaarsuit)) என்ற கடலோர கிராமத்தின் அருகில் பிரமாண்டமான மலை போன்ற பனிப்பாறை கடலில் மிதந்து வந்தது.

அப்போது பனிப்பாறையில் இருந்து ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இதனால் ஆழிப்பேரலை போன்ற மிகப் பெரியை அலை உருவானது. இதன் தொடர்ச்சியாக எழுந்த அலைகள் சுனாமி போல ஊருக்குள் புகுந்தன. இந்த நிகழ்வுகள் கடலோர பகுதியில் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *