காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு தீவிரவாதி பலி

காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் ஒரு தீவிரவாதியை சுட்டுக் கொன்றனர். குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை ஒட்டியர் சஃபாவாலி கல் ((Safawali Gal)) என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது மறைவிடத்தில் இருந்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கியதையடுத்து பாதுகாப்புப் படையினர் திருப்பிச் சுட்டனர்.

இதில் ஒரு தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். அங்கிருந்து ஒரு ஏ.கே. 47 ரக துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது. இந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *