கல்வி நிலுவைத் தொகையை வழங்கக்கோரி மத்திய அமைச்சரை சந்திக்க திட்டம் – அமைச்சர் செங்கோட்டையன்

கட்டாய கல்வி சட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெறுவதற்காக, விரைவில் மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் சார்பில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் இதுவரை 102 கோடி ரூபாய் நிதி மட்டுமே மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *