கர்நாடக மாநிலத்தின் பிரபல பெண் பத்திரிக்கையாளர் கெளரி லங்கேஷ், மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து, பெங்களூருவில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

 

பெங்களூருவின் சங்கொலி ராயண்ணா ரயில் நிலையம் முன்பிருந்து தொடங்கிய இந்த பேரணி, சென்ட்ரல் கல்லூரி மைதானத்தில் நிறைவடைந்தது. I am Gouri என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பேரணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் மட்டுமின்றி, ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். பேரணியின் முடிவில் பேசிய கெளரி லங்கேசின் தாயார், தங்கள் துக்கத்தை பகிர்ந்து கொண்ட ஒவ்வொருவரையும், கெளரியாகவே பார்ப்பதாக குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *