இதைத்தொடர்ந்து பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களின் பிரச்சினைக்கும் தொடர்ந்து குரல் கொடுப்பவர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் என புகழாரம் சூட்டினார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய புரட்சியாளர் அம்பேத்கர் வடிவில் தற்போது எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் போராடி வருவதாக அரசியல் கட்சித் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய புரட்சியாளர் அம்பேத்கர் வடிவில் தற்போது எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் போராடி வருவதாகவும், இந்திய அரசியல் வரலாற்றில் இந்த மாநாடு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்றும் தெரிவித்தார்.
பின்னர் பேசிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மோடியின் ஆசை வார்த்தைகள், மிரட்டல்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையோ, தொல். திருமாவளவனையோ கட்டுப்படுத்தாது என்றும் மக்களின் உணர்வுக்கு ஏற்ப மாநிலத்தின் கையில் ஆட்சி இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.