ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் வைகோவை அச்சுறுத்தியவர்கள் மீது நடவடிக்கை தேவை ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்..

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் வைகோவை அச்சுறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் மாறி மாறி தெரிவிக்கும் கருத்துக்களால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த சந்தேகங்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஜெனிவாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட சிங்களர்களுக்கு கண்டனம் தெரிவித்த எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், அதில் தொடர்புடையவர்கள் மீது ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நடராஜன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் போது, அவரது மனைவி என்ற முறையில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் மனுவை பரிசீலித்து அவருக்கு பரோல் வழங்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

அதிமுக கொறடாவை மீறி எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக செயல்பட்டவர்கள் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் தான் என்றும், இது தொடர்பான வழக்கு விசாரணை முடிவு எப்படி உள்ளது என பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *