எஸ்.சி. மாணவர்களுக்கு சீட்டு மறுக்கப்படுகிறதா…?: மாநில அரசுகளுக்கு புதிய உத்தரவு

உதவி தொகை பெற காலதாமதமானதால் எஸ்.சி. மாணவர்களுக்கு கல்லூரிகளில் சீட்டு மறுக்கப்படுவது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய சமூக நலத்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

எஸ்.சி. மாணவர்களுக்கு அரசு சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இப்போது அந்த கல்வி உதவித்தொகை, சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் அரசிடம் இருந்து உதவித்தொகை வரும் வரையில் கல்வி கட்டணம் செலுத்த முடியாது என்பதால் கல்லூரியில் எஸ்.சி. மாணவர்களுக்கு இடம் மறுக்கப்படுவதாக புகார்கள் எழுந்து உள்ளன.

இந்நிலையில் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு மத்திய சமூக நலத்துறை மற்றும் அதிகார வழங்கல் துறை அமைச்சகம் இதுதொடர்பாக கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.

அந்த கடிதத்தில் “எஸ்.சி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை அவர்களது வங்கி கணக்கில் அரசு செலுத்தும் வரையில், அவர்கள் கல்வி கட்டணம் செலுத்துவதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும்” என்று கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *