எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை, புதுக்கோட்டை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பு

நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றன.நாகை மாவட்டம் புஷ்பவனம் அருகேயுள்ள மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர் நேற்று காலை கடலுக்குள் நாட்டுப்படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி படகுடன், 5 நாகை மீனவர்களையும் காரைநகர் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

இதேபோல், புதுக்கோட்டை  மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து  நேற்று  மீன்  பிடிக்க  சென்ற மீனவர்களாக செல்வம், பழனி, சுப்ரமணி உள்ளிட்ட 5  பேரை, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி  மீன்  பிடித்ததாகக்  ஒரு  விசைபடகுடன் கைது  செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *