இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கரம்பீர் சிங் பதவியேற்பு

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கரம்பீர் சிங் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். 

கடற்படை தளபதியாக இருந்த சுனில் லன்பாவின் பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கரம்பீர் சிங் 24 ஆவது கடற்படை தளபதியாக இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.

வலுவான அடித்தளத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை, புதிய உச்சங்களை எட்டுவதை தமக்கு முன்பிருந்த தளபதிகள் சாத்தியமாக்கியதாகவும், அதே முயற்சிகளை தாமும் தொடர உள்ளதாகவும் கரம்பீர் சிங் குறிப்பிட்டுள்ளார்.

ஆற்றலும் வலிமையும் கொண்ட, கடல்சார் பாதுகாப்பு தொடர்பான சவால்களை எதிர்கொள்ள தயாராக உள்ள கடற்படையை வழிநடத்த இருப்பதாகவும் கரம்பீர் சிங் தெரிவித்துள்ளார்.கடற்படை தளபதியாக கரம்பீர் சிங் பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து மூத்த அதிகாரிகளும், அவரது குடும்பத்தினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனிடையே, பணிமூப்பு அடிப்படையில் தமக்கு கடற்படை தளபதி பதவி வழங்காமல், கரம்பீர் சிங்கிற்கு வழங்கிவிட்டதாக வைஸ் அட்மிரல் பிமல் வர்மா தொடர்ந்த வழக்கு, ஆயுதப் படைகள் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது. இருப்பினும் கரம்பீர் சிங் கடற்படை தளபதியாக பதவியேற்க தடையில்லை என தீர்ப்பாயம் கூறிவிட்ட நிலையில், இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *