இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் இன்று நடைபெறுகிறது. தொடரை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 20 ஓவர் கிரிக்கெட்டில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியை வீழ்த்திய உற்சாகத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. இரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை நேருக்கு நேர் விளையாடிய 15 ஆட்டங்களில் இந்திய அணி 10 முறை வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா நவம்பர் 1ஆம் தேதிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடி விட்டு, ஓய்வு பெற இருப்பதாக நெஹரா அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *