ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு பட்டத்தை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கைப்பற்றியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதன் ஆடவர் இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், குரோசியாவின் மரின் சிலிக் ஆகியோர் விளையாடினர். நெடுநேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் ஆறுக்கு இரண்டு, ஆறுக்கு ஏழு, ஆறுக்கு மூன்று, மூன்றுக்கு ஆறு, ஆறுக்கு ஒன்று என்கிற செட் கணக்கில் ரோஜர் பெடரர் வெற்றிபெற்றுப் பட்டத்தைக் கைப்பற்றினார். இது அவருக்கு இருபதாவது கிராண்ட்சிலாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *