ஆளுநருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என ஆளுநர் அலுவலகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் தவறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிப்பது அரசியல் சட்டத்தின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக மரபாகும். ஆனால், எதிர்க்கட்சிகளை மிரட்டும் வகையில் ஆளுநா் அலுவலகம் செயல்படுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.