ஆயுதபூஜை, விஜயதசமி, விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்காக கூடுதலாக 831 பேருந்துகள் இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் வியாழனன்று ஆயுதபூஜையும் வெள்ளியன்று விஜயதசமியும் கொண்டாடப்படவுள்ளது. மேலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என நான்கு நாட்கள் விடுமுறையாக வருவதால் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்ககூடும். எனவே வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக கூடுதலாக 831 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.