தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்தியா மாகாண தலைநகரான கார்டிசில் உள்ள காவல்நிலைய தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள காவலர்கள் பயிற்சி கட்டிடத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளதாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனிடையே தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
2017-10-18