காரைக்கால் அருகே அமைந்துள்ள மார்க் துறைமுகத்தின் செயல்பாடுகள், இனி ஆட்சியரின் நேரடிப் பார்வையில் நடைபெறும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருக்கிறார்.
காரைக்காலை அடுத்த வாஞ்சூரில், மார்க் என்ற தனியார் துறைமுகம் அமைந்திருக்கிறது. இந்த துறைமுகத்தினால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது உட்பட பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
இதையடுத்து, அங்கு சென்ற புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, மார்க் தனியார் துறைமுக செயல்பாடுகள், ஆட்சியரின் நேரடி மேற்பார்வையில் நடைபெறும் என உறுதியளித்தார்.