காஷ்மீரில் சியார் பாபா அருவியில் குளித்து கொண்டிருந்தவர்கள் மீது பாறை உருண்டு விழுந்ததில் 7 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் ஷேஹர் பாபா எனும் அருவி உள்ளது. இந்த அருவி பிரபலமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் அந்த அருவியில் குளிக்க திரண்டனர். அனைவரும் அருவியில் உற்சாகமாக நீராடிக் கொண்டிருந்தனர்.
அப்போது யாரும் எதிர்ப்பாராத வகையில் திடீரென மலை உச்சியில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்தன. அருவியில் குளித்து கொண்டிருந்தவர்கள் மீது பாறை விழுந்ததில் சம்பவடத்திலேயே உடல் நசுங்கி 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இந்த விபத்தில் மேலும் 30 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் அங்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மகிழ்ச்சியாக நாளை கழிக்க சென்றவர்கள் உயிரை விட்ட பரிதாபம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.