அரசியல் களத்திற்கு வருவதற்கு, தற்போது, எந்த அவசரமும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 15ம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் தமது ரசிகர்களை சந்தித்தார். 12 வருடங்களுக்குப் பிறகு நடிகர் ரஜினி, ரசிகர்களை நேரில் சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தச் சந்திப்பின்போது, ஆண்டவன் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் என்றும், போர் வரும்போது அதை எதிர்கொள்வோம் என்றும் ரசிகர்களிடம் ரஜினி கூறினார். இதனையடுத்து டிசம்பர் 12ம் தேதி தமது பிறந்தநாளில் ரஜினி அரசியல் கட்சி குறித்து அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தன்னுடைய பிறந்தநாளுக்கு பின்னர் ரசிகர்களை மீண்டும் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் காலா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்திருப்பதாகவும், அரசியல் களத்திற்கு வருவதற்கு, தற்போது, எந்த அவசரமும் இல்லை என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *