மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா குடியரசு தின வாழ்த்து!
இந்திய திருநாட்டின் குடியரசு தினநாள், குடிமக்களின் அரசாக இந்நாடு பிரகடனப்படுத்தப்பட்ட நன்னாள். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பதை உறுதிப்படுத்திய முக்கிய நாள் குடியரசு தின நாள். இந்நாளில் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
நாட்டில் மக்களைப் பிளவுபடுத்தி அதன்மூலம் தங்களது பாசிசக் கோட்பாடுகளை செயல்படுத்தி வெறியுணர்வை பரப்பிடும் பிளவு சக்திகளான மத வாத சக்திகளை முறியடித்து, ஜனநாயகத் தத்துவங்களை உறுதிப்படுத்தவும், நாட்டைப் பிளக்கும் பாசிசம், சமூக அமைதியைக் சீர்குலைக்கும் சாதியம், நாட்டைச் சுரண்டும் ஊழல் ஆகியவற்றை வேரறுக்கவும் இந்தியர் அனைவரும் ஜனநாயக வழியில் அனைவரும் ஓரே அணியில் திரளவேண்டும்.
குடியரசு தினத்தில் நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள அறநெறிகளை வலுப்படுத்தவும் பாதுகாக்கவும் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.