வெஞ்சுரா மற்றும் சாண்டா பார்பரா பகுதிகளில் தாமஸ் என்று பெயரிடப்பட்டுள்ள காட்டுத் தீ கடந்த வாரம் பற்றியது. 2 லட்சத்து 30 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களையும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்களையும் நாசமாக்கிய இந்த காட்டுத் தீ மாண்டெசிடொ, சம்மர்லேண்ட் கவுன்ட்டிகளை நோக்கி பரவி வருகிறது. ஆறாயிரத்துக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். விமானங்கள் மூலமும் தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காற்றின் வேகம் காரணமாக மலை சார்ந்த வனப் பகுதிகளில் நெருப்பை அணைக்கும் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
2017-12-13