ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய அணி வீரர் டோனி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் மேற்கிந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கு பிறகு மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.
இதை தொடர்ந்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி முதலில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளில் முன்னாள் கேப்டன் டோனி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான டி 20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பெற்றுள்ளார்.