ஐ.எஸ்.எல். கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டத்தில் சென்னை அணியை 3க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோவா அணி வெற்றி பெற்றது. சென்னையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் தொடக்கம் முதலே விறுவிறுப்புடன் விளையாடின.
கோவா அணியின் வீரர் எடு பெடியா 12வது நிமிடத்திலும், பெரான் கரோமினாஸ் 53வது நிமிடத்திலும், மோர்ட்டா ஃபால் 80வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் சென்னை அணியின் எலி சபியா கோல்அடித்ததால் 3-1 என்ற கோல் கணக்கில் கோவா அணி வெற்றி பெற்றது.