சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்களிடையே நடந்த மோதல் வழக்கில் தண்டிக்கப்பட்ட 21 பேரையும் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. சென்னை பாரிமுனையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில், 2008 ம் ஆண்டு இரு பிரிவு மாணவர்களுக்கு இடையில் கடும் மோதல் வெடித்தது.
இந்த சம்பவம் தொடர்பாக, 21 மாணவர்களுக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவர்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் விசாரித்தார். அப்போது,போலீசார் தரப்பில் பல்வேறு குறைகளைச் சுட்டிக் காட்டிய நீதிபதி, 21 மாணவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.