14 தொழிற்சாலைகளை விரிவுபடுத்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

14 தொழிற்சாலைகளை விரிவுபடுத்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சுமார் 40 நிமிடங்கள் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில், வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஏற்கெனவே டிசம்பர் 24ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது, தமிழகத்தில் உள்ள 14 தொழிற்சாலைகளை விரிவுபடுத்த ஒப்புதல் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.

அதேபோல் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும், 14 தொழிற்சாலைகளை விரிவுபடுத்த ஒப்புதல் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், 30 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதுடன், 18 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *