போக்குவரத்து விதிமீறல் – Police E Eye என்ற செயலி அறிமுகம்

போக்குவரத்து விதிமீறல்களை காவல்துறைக்கு தெரிவிக்கும் வகையில் போலீஸ் இ ஐ (Police e Eye) என்ற செயலி கோவையில் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் இந்த செயலியை தொடங்கி வைத்தார்.  செயலியை பதிவிறக்கம் செய்து, சுய விவரங்களை குறிப்பிட வேண்டும்.

செயலியின் பயனராக சேர்ந்த பின்னர், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை புகைப்படம் எடுத்து, அனுப்பலாம். இதன் அடிப்படையில் வாகன உரிமையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

சோதனை முயற்சியின் போது 8 லட்சம் ரூபாய் வரை இந்த செயலி மூலம் அபராதம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *