புயல் முன்னெச்சரிக்கையைத் தொடர்ந்து, மீன்பிடிப்புக்குச் சென்றுள்ள மீனவர்கள் அருகில் உள்ள துறைமுகங்களில் கரை ஒதுங்க அறிவுறுத்தல்

புயல் முன்னெச்சரிக்கையைத் தொடர்ந்து, ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றுள்ள மீனவர்கள் அருகில் உள்ள துறைமுகங்களில் கரை ஒதுங்குமாறு மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

வங்கக்கடலில் நாளை புயல் உருவாகக் கூடும் என்றும், 15 மற்றும் 16ஆம் தேதிகளில் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதை மீன்வளத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த எச்சரிக்கை குறித்து அனைத்து மீனவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், நேற்றிலிருந்தே  மீனவர்களுக்கு டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 321 படகுகள் ஆழ்கடலில் உள்ளன என்றும், அவை விசாகப்பட்டினம், கிருஷ்ணபட்டினம் அருகே உள்ளதாக கண்டறிந்துள்ளதாகவும் மீன்வளத்துறை கூறியுள்ளது.

இந்திய கடலோர காவல்படை, கப்பற்படை மூலம் ஆழ்கடல் படகுகளுக்கு தகவல் வழங்கப்பட்டு, அருகில் இருக்கும் துறைமுகங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரங்க் உள்ளிட்ட கடலோர காவல்படை கப்பல்கள், மீனவர்களுக்கு எச்சரிக்கை வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், மீன்வளத்துறை சார்பில் கிருஷ்ணபட்டினம் துறைமுகத்திற்கு ஒரு அதிகாரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மீன்வளத்துறை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *