சென்னை நங்கநல்லூரில் மூதாட்டியிடம் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு போலீசார் தேடிவருகின்றனர்.
நங்கநல்லூர் எஸ்.பி.ஐ. காலனியில் விஜயலட்சுமி என்ற 67 வயது மூதாட்டி நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்தார். மூதாட்டியின் பின்புறத்தில் வந்த மர்ம நபர் திடீரென மூதாட்டியைத் சாலையில் தள்ளி அவர் அணிந்திருந்த 5 சவரன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு கொள்ளையனுடன் சேர்ந்து தப்பினான்.
சி.சி.டி.வி.யில் கொள்ளையர்களின் பின்புறம் மட்டுமே பதிவாகியுள்ளது. அதிலும் ஒரு கொள்ளையன் ஹெல்மட் அணிந்திருந்ததால் அடையாளம் தெரியவில்லை. இருப்பினும் அந்த சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.