திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. வரும் 28-ம் தேதி திருவாரூரில் நடத்தப்படும் இடைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மாரிமுத்து என்பவர் சார்பில் வழக்கறிஞர் இந்திரா, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு முன்பு முறையிட்டார்.

20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருப்பதாகவும், கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் திருவாரூரில் மக்கள் தேர்தலுக்கு தயாராகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் வழக்கறிஞர் இந்திரா கோரியிருந்தார். ஆனால் அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *