தரமில்லா மிதிவண்டிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

கர்நாடக அரசு நிராகரித்த மிதிவண்டிகளை தமிழக மாணவர்களுக்கு விநியோகிக்க காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களின் நலன் காக்க, இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக, விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நடைமுறைபடுத்தியதாக கூறியுள்ளார்.

அதை பின்பற்றி கர்நாடகாவில் விலையில்லா மிதிவண்டி திட்டம் கொண்டுவரப்பட்டு, தற்போது அங்கு நிராகரிக்கப்பட்ட மிதிவண்டிகள் விழுப்புரம் மாவட்டம் தழுதாளி கிராமத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசாரணை மேற்கொண்டு, காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *