கரூர் மாவட்ட பொறுப்பாளர் தூக்கப்பட்ட நிலைக்குச் சென்றாரா? அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி

கரூர் மாவட்ட பொறுப்பாளர் தூக்கப்பட்ட நிலைக்குச் சென்றாரா? என்பது தெரியவில்லை என, அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வினவியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அமமுகவின் எழுச்சியை தடுக்கவும், முன்னேற்றத்தை முடக்கவும், துரோகிகள் மற்றும் எதிரிகளின் முயற்சிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த ஒரு ஒன்றிய செயலாளர் நேற்று கட்சியை விட்டு சென்றுவிட்டதாக டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.

அந்த நபரை, மீண்டும் அழைத்துக் கொண்டு வந்த கரூர் மாவட்ட பொறுப்பாளர், தற்போது, தூக்க நிலைக்கு சென்றாரா? அல்லது தூக்கப்பட்ட நிலைக்குச் சென்றாரா? என்பது தெரியவில்லை என்றும், வினவியிருக்கிறார். நெல்மணிகளோடு, களைகளும் சேர்ந்து வளர்வது நிலத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் தான் என்றும், அவற்றைக் காலம் உரிய நேரத்தில் அடையாளம் காட்டிவிடும் என்றும், டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.

செந்தில் பாலாஜி அமமுகவில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் அவரை மறைமுகமாக விமர்சித்து தினகரன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *