இன்று தீபாவளிப் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்

ஒளியின் சிறப்பை உணர்த்துவதுதான் தீபாவளிப் பண்டிகை. சுடர்விடும் தீபங்களால் இருள் அகன்று புத்தொளி பிறக்கும் நன்னாள் ஆகவும் இத்திருநாள் விளங்குகிறது. நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை இன்று களைகட்டியுள்ளது.

வீடுகள்தோறும் அதிகாலையிலேயே எழுந்து நீராடி, புத்தாடை உடுத்தி இறைவனையும், மூத்தவர்களையும் வணங்கினர். பட்டாசு வெடித்தும், மத்தாப்பு கொளுத்தியும் சிறுவர்களும், பெரியவர்களும் அளவில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

புதுமணத் தம்பதிகள் தலைதீபாவளியை குடும்பத்தோடு உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். தீபாவளியையொட்டி பெரும்பாலான கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுமுறை நாளான இன்று சுற்றுலாத் தலங்களுக்கு ஏராளமானோர் செல்வார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *