ஆசிரியர்கள் இடம் மாறுதல் கலந்தாய்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை, அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், மாணவிகள் கொலுசு அணிந்தும் பூ வைத்தும் பள்ளிக்கு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மாணவிகள் பூ அணிந்துவர எந்த ஆட்சேபனையும் இல்லை என கூறினார்.