அ.தி.மு.க. சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு விநியோகம்… இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் துவக்கி வைத்தனர்

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கல் அதிமுக தலைமையகத்தில் தொடங்கியுள்ளது.

சென்னை இராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விருப்ப மனு விண்ணப்பங்கள் வழங்கலைத் தொடங்கி வைத்தனர்.

அதிமுக உறுப்பினர்கள் 25ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை இன்றுமுதல் பிப்ரவரி 10 ஞாயிற்றுக்கிழமை வரை பெற்றுக்கொள்ளலாம். நிரப்பிய விண்ணப்பங்களை பிப்ரவரி 10 மாலை 5மணிக்குள் கட்சித் தலைமையகத்தில் கொடுக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் பெறப்பட்டுக்கூட்டணிப் பேச்சு, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு அனைத்தும் முடிந்தபின் எந்தெந்தத் தொகுதிகளின் வேட்பாளர் யார் என்கிற பட்டியல் வெளியிடப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *