மதுரையில், பல்வேறு சமயங்களில் கொள்ளை போன ரூ. 1 கோடி மதிப்புள்ள பொருட்கள் மீட்பு

மதுரையில் 50க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் பறிபோன 350 சவரன் நகை 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உட்பட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கடந்த ஒருவாரத்தில் போலீசார் மீட்டுள்ளனர்.

மதுரையில் பல மாதங்களாக பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட கும்பல்களை பிடிக்க மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் சுமார் 50-க்கு மேற்பட்ட கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் களவு போன 350 சவரன் நகை,19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், 3 கார்கள், 23 இருசக்கர வாகனங்கள், லாரி உள்ளிட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் தொடர்பாக 13 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்  அடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *