கேரளாவிற்கு ரயில் மூலம் கடத்தப்பட்ட 1.5 டன் ரேசன் அரிசி பறிமுதல்

நெல்லையில் இருந்து கேரளாவிற்கு ரயில் மூலம் கடத்தப்பட்ட ஒன்றரை டன் ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை நோக்கி புறப்பட இருந்த பயணிகள் ரயிலில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பழப்பெட்டி மற்றும் பைகளில் ஒன்றரை டன் ரேசன் அரிசி மறைத்து வைத்து கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் கடத்தலில் ஈடுபட்ட எட்டு பெண்களை கைது செய்தனர்.பிடிபட்ட ஒன்றரை டன் ரேசன் அரிசி பின்னர் குடிமை பொருள் வழங்கல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *