காரைக்குடி அருகே நண்பர்களுக்கிடையேயான மோதலில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நண்பர்களுக்கிடையேயான மோதலில் இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைக்குடியை அடுத்த ஒ.சிறுவயலைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் அவரது நண்பர்களான விஜய் உள்ளிட்ட மூவருக்கும் கடந்த 5-ஆம் தேதி கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது நண்பர்களில் ஒருவர் கத்தியால் குத்தியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில், மதுரை அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்த போலீசார் தலைமறைவான விஜய்யை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *