தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நக்கீரன் ஆசிரியர் கோபால் சந்திப்பு.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நக்கீரன் ஆசிரியர் கோபால் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நக்கீரன் கோபால், தனது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருவதாகத் தெரிவித்தார். கருத்துரிமைக்கும் பத்திரிக்கை சுதந்திரத்திற்கும் நீதிமன்றம் துணை இருக்கும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

முன்னதாக சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமையகமான தாயகத்தில் வைகோவை சந்தித்து நக்கீரன் கோபால் நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ பல்கலைக்கழங்களில் ஊழல் மலிந்துவிட்டதாக கூறிய ஆளுநர் தற்போது அவரது நிலைப்பாட்டை மாற்றி கூறுவதை ஏற்க முடியாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *