தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல்கள் படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் பேசிய அவர், காய்ச்சலுக்கு தேவையான அனைத்து மருந்து வகைகளும் கையிருப்பில் உள்ளது என்றும் கூறினார்.
இலுப்பூரில் இருந்து புதுக்கோட்டை வரை உள்ள அரசு மருத்துவமனைகளை, இரு சக்கர வாகனத்திலேயே பயணம் செய்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.