திண்டுக்கல்லில் எலுமிச்சை விலை மூன்று மடங்கு உயர்ந்து, ஒரு மூட்டை 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை, ஆடலூர், பன்றிமலை, தாண்டிக்குடி ஆகிய பகுதிகளில் அதிக அளவு எலுமிச்சை விளைவிக்கப்படுகிறது.
அங்கிருந்து நாகல்நகர் பாலம் அருகே உள்ள சிறுமலைசெட் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு வியாபாரிகளால் ஏலம் விடப்படுகிறது. இந்த ஆண்டு பருவமழை கைகொடுத்ததால் எலுமிச்சை விளைச்சல் அதிகரித்துள்ளது. எலுமிச்சை விலையும் 3 மடங்கு அதிகரித்துள்ளது.