அதிகாலை 3 மணிக்கு கொலை செய்யப்பட்ட ஆசிரியை!

ராமநாதபுரம் அருகேயுள்ள கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ், அரண்மனை பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார். இவரின் மனைவி சண்முகப்பிரியா ரோமன் சர்ச் பகுதியில், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் சண்முகப்ரியா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அருகிலுள்ள துரைராஜ் என்பவரின் வீட்டு சுவற்றருகே கிடந்துள்ளார்.

இதுகுறித்து, அங்கிருந்தவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர், ஆசிரியையின் கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *