அமெரிக்க- சீன அதிபர்கள் சந்தித்துப் பேசியதை அடுத்து இருநாடுகளும் வணிகத் தகராறைத் தீர்க்கும் வகையில் வரி உயர்வை 3மாதங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளன.
சீன இறக்குமதிப் பொருட்களுக்கான வரியை அமெரிக்கா கடுமையாக உயர்த்தியது. இதையடுத்து அமெரிக்க இறக்குமதிப் பொருட்களின் மீதான வரியைச் சீனாவும் உயர்த்தியது. இந்தப் போட்டி இருநாடுகளிடையே வணிகப்போராக மாறியுள்ள நிலையில், அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் ஜி 20மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீன அதிபர் சி ஜின் பிங்கும் இரண்டரை மணி நேரம் சந்தித்துப் பேசினர்.
இரு நாட்டு அதிபர்கள், உயர் அதிகாரிகளின் பேச்சின் முடிவில் வரி உயர்வை 3மாதங்களுக்கு நிறுத்தி வைக்க முடிவெடுத்துள்ளனர். இதனால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு 10விழுக்காடாக உள்ள வரியை ஜனவரி 1முதல் 25விழுக்காடாக உயர்த்த இருந்த முடிவை அமெரிக்கா கைவிடும்.