பிலிப்பைன்ஸ் அருகே ரிக்டரில் 7ஆக பதிவான நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் அருகே நடுக்கடலில் ரிக்டரில் 7 ஆக பதிவான நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸின் மிகப்பெரிய நகரமான மிண்டானோவில் இருந்து சுமார் 120 மைல் தொலைவில் கடலுக்கு அடியில் இன்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால்,மிண்டானோ நகரில் ஒரு சில இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியதாக கூறப்படுகிறது. ரிக்டர் அளவில் 7ஆக பதிவான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, பிலிப்பைன்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *