பிலிப்பைன்சில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரிப்பு

பிலிப்பைன்சில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.

அந்த நாட்டின் மத்திய பகுதியில் உள்ள பிகோல் மற்றும் கிழக்கு விசயாஸ் பிராந்தியங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் அங்குள்ள 300-க்கும் மேற்பட்ட ஊர்கள் பலத்த சேதமடைந்தன. கனமழையால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளத்தால்  1 லட்சத்து 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதாக பேரழிவு மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *