ரஷ்யாவின் மாக்னிடோ கோர்ஸ்க் நகரில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் தரைமட்டமான கட்டடத்தின்இடிபாடுகளுக்கு இடையே 11 மாத கைக்குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டது.
சுமார் 35 மணி நேரம் இடிபாடுகளுக்கு இடையிலும் கடும் குளிரிலும் அந்த ஆண்குழந்தையின் அழுகை கேட்டுக் கொண்டிருந்தது. கடுமையான முயற்சிக்குப்பிறகு மீட்புக் குழுவினர் அந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
அதன் உடலில் காயங்கள் இருந்ததால் உடனடியாக அது விமானம் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கேஸ் கசிவால் அந்த 10 மாடிக் கட்டடத்தில் இருந்த 48 குடியிருப்புகள் தரைமட்டமாகி விழுந்ததில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர்.இருபதுக்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடைபெறுகிறது.